Connect with us

Raj News Tamil

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? ரஜினிக்கு பதிலடியா?

சினிமா

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? ரஜினிக்கு பதிலடியா?

லியோ படத்தின் வெற்றி விழா, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தளபதி விஜய், தனது ரசிகர்களுக்கு வழக்கம் போல், குட்டி ஸ்டோரி சொல்லி உற்சாகப்படுத்தினார்.

அதாவது, அவர் குட்டி ஸ்டோரி என்னவென்றால், ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகு என்று நிறைய மிருகங்கள் இருந்துச்சாம். அந்த காட்டுல வேட்டையாட இரண்டு பேர் போனாங்களாம்.

ஒருத்தர் வில் அம்பு எடுத்துக் கொண்டு சென்றாராம். இன்னொருவர் ஈட்டி எடுத்துக் கொண்டு சென்றாராம். வில் அம்பு எடுத்துச் சென்றவர் முயலுக்கு குறி வைத்தாராம். ஈட்டி எடுத்து வந்தவர் யானைக்கு குறி வைத்தாராம்.

ஆனால், வில் அம்பு எடுத்து சென்றவர் மட்டுமே முயலை பெற்றாராம். யானையை குறி வைத்தவருக்கு எதுவும் கிடைக்கவில்லையாம். இருந்தாலும், இதில் மாஸ் யார் என்றால், யானைக்கு குறி வைத்தவர் தான்.

ஏனென்றால், எப்போதும் பெரிய விஷயங்களுக்கு தான் ஆசைப்படணும். அதனால், ஆசையை பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள் என்று விஜய் குட்டி ஸ்டோரியை முடித்திருந்தார். இந்த கதை, ரஜினிக்கு விஜய் சொன்ன பதிலடி என்று, இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More in சினிமா

To Top