ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று தொடர் வெற்றிப் படங்களை இயக்கியவர் அட்லி. இதையடுத்து, பாலிவுட்டுக்கு சென்ற இவர், ஷாருக்கானை வைத்து, ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து, மிகப்பெரிய சாதனையை செய்தது.
திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி, தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டும் அட்லி, தெறி படத்தின் இந்தி ரீமேக்கை, தற்போது தயாரித்துள்ளது. இந்த திரைப்படம், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், அட்லி அடுத்ததாக தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.