விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நிறைவு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்குப் பதிவு, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தேர்தலில், 5 மணி நேர நிலவரப்படி, 77.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இறுதிக்கட்டமாக, 80 சதவீதம் அல்லது அதற்கும் மேல் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சில சலசலப்புகள் மத்தியில், அமைதியான முறையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிறைவு பெற்றது.

RELATED ARTICLES

Recent News