Connect with us

Raj News Tamil

சோகத்தில் மூழ்கிய கிராமம்: தூங்கிகொண்டிருந்த ராணுவ வீரர் கொலை!

தமிழகம்

சோகத்தில் மூழ்கிய கிராமம்: தூங்கிகொண்டிருந்த ராணுவ வீரர் கொலை!

ராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ வீரர் வேல்முருகன் காஷ்மீரில் பணியாற்றிவந்துள்ளார். இவர் கடந்த அக்.1 தேதி விடுப்பில் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தைச் வெம்பூருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வேல்முருகன் தனது வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்ற இளைஞர் மாடியில் தூங்கிகொண்டிருந்த வேல்முருகனை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த வேல்முருகன் வீட்டின் கீழே வந்து மயங்கி விழுந்துள்ளார். வீட்டின் கீழ் பகுதியில் இருந்த அவர் குடும்பத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்களிலேயே ராணுவ வீரர் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வெம்பூர் கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இச்சம்பவம் வெம்பூர் கிராமத்தில் கடும் சோதகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

More in தமிழகம்

To Top