Connect with us

Raj News Tamil

சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

விளையாட்டு

சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

கடந்த ஐபிஎல் சீசனின் போது ஆர்சிபி அணிக்காக விளையாடிய விராட் கோலிக்கும் லக்னோ அணிக்காக விளையாடிய ஆப்கனை சேர்ந்த நவீன் உல் ஹக்கிற்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த வார்த்தை போர் ஐபிஎல் முழுவதும் நீடித்து வந்தன.

இந்த சூழலில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது ‘கோலி.. கோலி..’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.

இது குறித்து நவீன் உல் ஹக், “விராட் கோலி சிறந்த வீரர். நாங்கள் கைகள் குழுக்கிக் கொண்டு இந்தப் பிர்சனையில் இருந்து முன்னகர்ந்து விட்டோம். மைதானத்துக்குள் நடந்தது அத்துடனே முடிந்து விட்டது. மைதானத்துக்கு வெளியே எதுவுமில்லை. விராட் கோலி ‘இதை முடித்துக்கொள்வோம்’ எனக் கூறினார். நானும் அதையே கூறினேன்” என நெகிழ்ச்சியாகப் பேசினார்.

More in விளையாட்டு

To Top