Connect with us

Raj News Tamil

பரவி வரும் பறவை காய்ச்சல் : 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழகம்

பரவி வரும் பறவை காய்ச்சல் : 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், ஆந்திர எல்லையை ஒட்டி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோழி பண்ணைகள் அதிகம் உள்ள நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகளில், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாமக்கல்லில் தற்போது நிலவும் தட்ப வெப்பநிலைக்கு பறவை காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top