Connect with us

Raj News Tamil

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு

அரசியல்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு

கடந்த 1995 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியது தொடர்பாக பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது வாரண்ட் பிறப்பிக்கட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top