தமிழகம்
சாலையில் தேங்கிய கழிவு நீர் – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?
மதுரை அருகே, சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று கோடை மழை பெய்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், இந்த திடீர் மழை காரணமாக, மேலூர் பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் காரணமாக, கழிவு நீர் செல்ல முடியாமல், மழை நீருடன் கலந்து, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே, இதனை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login