தமிழகம்
பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்…வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் மெயின் சாலையில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோலை போட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தண்ணீர் கலந்த பெட்ரோல் போட்டதால் வாகனத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றதாக அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பங்க் மேற்பார்வையாளர் நரிக்குறவர்களுக்கு இங்கே இனிமேல் பெட்ரோல் கிடையாது என்று மிகவும் கடுமையாக பேசி உள்ளார்.
இது குறித்து பெட்ரோல் பங்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்களை பொதுமக்கள் கேட்டதற்கு முறையான பதில் தெரிவிக்காமல் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். விருப்பம் இருந்தால் போடவும் இல்லை என்றால் கிளம்பவும் என்று முரணான பதில் கூறியுள்ளனர்.
பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் மற்றும் டீசல் போட்ட வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பழுதடைந்த இருப்பதாகவும் இந்த பங்கின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்
குறிப்பாக இந்த பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு இந்த பெட்ரோல் பங்க் அருகில் இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் போட்டுவிட்டு சொந்த ஊருக்கு வாகன ஓட்டிகள் செல்வதாகவும் சில பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் திருமுல்லைவாயல் பகுதியில் தண்ணீர் கலந்த பெட்ரோல் போட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.