Connect with us

Raj News Tamil

நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் செல்ல வேண்டும்: பிரதமர் மோடி!

இந்தியா

நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் செல்ல வேண்டும்: பிரதமர் மோடி!

நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில் பி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியா இதுவரை 17 பொதுத் தேர்தல்களையும், 300 முறை மாநில பேரவைத் தேர்தல்களையும் நடத்தியிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மக்கள் எங்கள் கட்சியை மீண்டும் ஆட்சியமைக்கவைத்தனர். இது உலகிலேயே மிகப்பெரிய தேர்தலாக இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் திறன் காரணமாக, ஒரு சில மணி நேரங்களிலேயே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடுகின்றன.

வரும் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் சுமார் 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த உலகத்தையும், நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அமைதி, சகோதரத்துவம், முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம் இது. அதுமட்டுமல்ல, இது அனைவரின் முன்னேற்றத்துக்குமான நேரம் என்றும் மோடி கூறினார்.

More in இந்தியா

To Top