Connect with us

Raj News Tamil

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் – ஓபிஎஸ் உறுதி

அரசியல்

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் – ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு, எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் அதிக கட்சிகள் கைகோர்த்துள்ளதால், மெகா கூட்டணி உருவாக்கியுள்ளது என்று கூறினார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மோடி 3 ஆவது முறையாக பிரதமரானால், தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று நம்பிக்கையில் கூட்டணி அமைத்து இருப்பதாக கூறினார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top