அரசியல்
சீறப்பாய்ந்த காளை….தெறித்து ஓடிய பாஜக தொண்டர்கள்…கட்டுப்படுத்திய அண்ணாமலை
என் மண் என் மக்கள் என்ற பெயரில் மேலூரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஜல்லிக்கட்டு காளைகள் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, ஒரு ஜல்லிக்கட்டு காளைக்கு அண்ணாமலை மஞ்சள் நிற சால்வை அணிவித்த நிலையில், ஜல்லிக்கட்டு காளை மிரண்டு ஆள் உயரத்தில் எகிறியது. இதனால் பதற்றமடைந்த, அண்ணாமலை மற்றும் அவரது பாதுகாவலர்கள், அவரை பாதுகாத்தனர்.
பிறகு அண்ணாமலை தான் அணிந்திருந்த மாலையை கழற்றி விட்டு, மிரண்ட ஜல்லிக்கட்டு காளையை சாமதானம் செய்து தடவி கொடுத்தது. அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.