தொண்டர்படை இருக்கும் போது குள்ளநரிகளுக்கு என்ன வேலை: அதிமுக தொண்டரின் போஸ்டரால் பரபரப்பு!

தொண்டர்படை இருக்கும் போது குள்ளநரிகளுக்கு என்ன வேலை” என்று அதிமுக தொண்டரின் போஸ்டரால் பரபரப்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் எதிர்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்., சசிகலா என பலரும் பிரிந்து கிடக்கின்றனர்.

எனினும் அதிமுகவை பொதுச் செயலாளராக இருந்து எடப்பாடி கே.பழனிச்சாமி வழி நடத்திக் கொண்டிருக்கிறார். 2026 தேர்தலில் அதிமுக ஒன்றுபடும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிமுக தரப்பில் வாய்ப்பே இல்லை என்பது போல் கதவை மூடி வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி மணலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மாவட்ட எம்ஜிஆர் இளைரணி துணைச் செயலாளர் மணிமாறன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டரில் “கழகம் காக்க புரட்சித் தமிழர் தொண்டர்படை இருக்கும் போது குள்ள நரிகளுக்கு என்ன வேலை ” சாடுவது போல் போஸ்டர் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News