Connect with us

Raj News Tamil

ஆவின் பாலில் மிதந்த வெள்ளை புழுக்கள் – மக்கள் அதிர்ச்சி

தமிழகம்

ஆவின் பாலில் மிதந்த வெள்ளை புழுக்கள் – மக்கள் அதிர்ச்சி

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிப் பாலை சூடு செய்வதற்காக, அடுப்பு மேல் உள்ள பாத்திரத்தில் கொட்டியுள்ளார். அப்போது, பாலில் வெள்ளை புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர், உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த அதிகாரிகள் பால் மற்றும் பாக்கெட்டுகளை சோதனையிட்டனர். அதில் இன்றைய தினம் கடைசி தேதி குறிப்பிடப்பட்டு பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top