டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த 5-ஆம் தேதி அன்று, தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள், கடந்த 8-ஆம் தேதி அன்று வெளியானது. அதில், 48 தொகுதிகளில், பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றிப் பெற்றன.
ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றிப் பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 27 வருடங்களுக்கு பிறகு, டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், டெல்லியின் முதல்வர் யார் என்பது தொடர்பாக, நேற்று பாஜகவினர் ஆலோசனை நடத்தி வந்தனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடக்கும் பதவியேற்பு விழாவில், அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோரைத் தொடர்ந்து, டெல்லியின் 4-வது முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.