பிரேம்ஜி திருமணத்திற்கு வராத இளையராஜா! ஓ.., இதுதான் காரணமா?

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி, நீண்ட நாட்களாக திருமணமே செய்துக் கொள்ளாமல் இருந்தார். ஆனால், ஒருவழியாக , இந்து என்ற பெண்ணை, சமீபத்தில் அவர் திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களது திருமணம், திருத்தணி முருகன் கோவிலில், மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா கலந்துக் கொள்ளவில்லை.

இதனை அறிந்த நெட்டிசன்கள், வழக்கம் போல், இளையராஜாவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். ஆனால், ஏற்கனவே ஒப்பந்தமான இசைக் கச்சேரிகள் இருந்ததால் தான், அவரால் திருமணத்திற்கு வர முடியவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

நிச்சயம் வர முடியாது என்பதை அறிந்த இளையராஜா, திருமணத்திற்கு முன்பே, பிரேம்ஜி-இந்து ஜோடியை, வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தாராம். மேலும், அந்த ஜோடிக்கு இளையராஜா பரிசு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News