தமிழகம்
தூங்கிக் கொண்டிருக்கும்போது கேட்ட சத்தம்.. எழுந்த கணவன்.. அதிர்ச்சி கொடுத்த மனைவி..
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த ராஜாமணி, தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும், தனது காதலை கைவிடாத செல்வி, நேற்று முன்தினம் காதலனை வீட்டிற்கே அழைத்து வந்து, உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
“இனிமேல் நீ இருந்தால் சிக்கல் தான்” என்று நினைத்த செல்வி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து, கணவனை சரிமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த ராஜாமணி, ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ராஜாமணியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த களேபரங்களுக்கு இடையே, கள்ளக்காதலன் ராமன் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர், செய்த தவறை உணர்ந்த செல்வி, அப்பகுதியில் உள்ள காவல்துறையில், சரணடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ராமனையும், சரண் அடைந்த செல்வியையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment Login