கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவனகவுடா என்பவரின் மனைவி ஷைலா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ருத்ரப்பா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த கணவன், தனது மனைவியை அடிக்கடி கண்டித்துள்ளார். இதனால், தங்களை கணவர் பிரித்துவிடுவார் என்று அஞ்சிய ஷைலா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதாவது, ஷைலா தனது கணவருடன், தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வரும்போது, கணவர் மட்டும், பைக்கில் தனியாக வந்துள்ளார். அப்போது, அவரை வழிமறித்த ருத்ரப்பா, மது அருந்துவதற்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில், சிவனகவுடாவிற்கு போதை தலைக்கு ஏறியுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த கல்லை எடுத்து, அவரது தலையில் போட்டு கொலை செய்துள்ளார். மேலும், இதனை வீடியோ காலில் பார்த்து, ஷைலா ரசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஷைலாவும், ருத்ரப்பாவும் செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனை ஏவி கொலை செய்ததுடன், அதனை வீடியோ காலில் பார்த்து மனைவி ரசித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.