இந்தியா
ரூ.45 கோடி சொத்து.. கள்ளக்காதலுக்காக ஆசை மனைவியே கணவனை கொன்ற கொடூரம்..
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கௌதம். ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு, பிங்கி என்ற மனைவி உள்ளார்.
45 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்துள்ள ராஜேஷ், தனது வீடு கட்டுமானப் பணிகளுக்காக, ராஜேந்திரா என்பவரை நியமித்துள்ளார். இதனால், ராஜேஷின் வீட்டிற்கு, ராஜேந்திரா அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இதற்கிடையே, பிங்கி-க்கும், ராஜேந்திராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், பிங்கி தனது கணவரை கொலை செய்துவிட்டு, அவரது சொத்தை எடுத்துக் கொண்டு, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ திட்டம் தீட்டினார்.
இதையடுத்து, ராஜேஷ் சாப்பிடும் சாப்பாட்டில், விஷத்தை கலந்து அவரை கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால், அப்போது, சாப்பாட்டில் வித்தியாசமாக ஏதே இருப்பதை உணர்ந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, உயிர் தப்பிவிட்டார்.
முதல் திட்டம் தோல்வியில் முடிந்ததால், உடனே தங்களது இரண்டாவது திட்டத்தை, பிங்கி செயல்படுத்த முயற்சி செய்தார். அதாவது, ராஜேஷ் நடைபயிற்சி செய்துக் கொண்டிருக்கும்போது, அவர் மீது காரை ஏற்றி, கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை முதலில், காவல்துறையினர் விபத்தாக வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ராஜேஷின் சகோதரர், காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிங்கியும், அவரது காதலனும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)