Connect with us

Raj News Tamil

கள்ளக்காதலனுடன் வீடியோ கால் – தட்டி கேட்ட கணவனை தீர்த்து கட்டிய மனைவி!

தமிழகம்

கள்ளக்காதலனுடன் வீடியோ கால் – தட்டி கேட்ட கணவனை தீர்த்து கட்டிய மனைவி!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேல வன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாமல்லன்(45) இவர் அருகில் உள்ள மேலநெடும்பூர் கிராமத்தில் குடிநீர் டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வரும் தங்கப்பாண்டியன் அவ்வப்போது சொந்த கிராமத்திற்கு வந்து செல்லும் போது நாகலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மாமல்லன் மனைவி நாகலட்சுமியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை மனைவி நாகலட்சுமி கைவிடுவதாக இல்லை.

இதனால் வீட்டை காலி செய்து சிதம்பரத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்து தினமும் மேலநெடும்பூர் கிராமத்திற்கு தான் வேலை செய்யும் டேங்க் ஆபரேட்டர் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வேலைக்கு வந்த மாமல்லன் மர்மமான முறையில் தலையில் ரத்த காயங்களுடன் சாலையோரம் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் நாகலட்சுமிக்கும் தங்கபாண்டியனுக்கும் இருந்த கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததுள்ளது. பின்னர் நாகலட்சுமியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்தார்.

தங்கபாண்டியன் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் அடிக்கடி கணவனுக்கு தெரியாமல் அவருடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதனை மாமல்லன் தட்டி கேட்கவே ஆத்திரமடைந்த நாகலட்சுமி வெளிநாட்டில் இருக்கும் கள்ளக்காதலன் தங்கபாண்டியனிடம் இது குறித்து முறையிட்டுள்ளார்.

தங்கபாண்டியன் தனது நண்பர்களான ராஜகுரு, இளவேந்தன் ஆகியோரை வைத்து வேலைக்கு வந்த மாமல்லனை தலையில் அடித்து கொலை செய்து விட்டு அதனை விபத்து போல மாற்றியுள்ளார். தொடர்ந்து நாகலட்சுமி, ராஜகுரு, இளவேந்தன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் வெளிநாட்டில் இருக்கும் தங்கபாண்டியனை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top