2025 ஐ.பி.எல். போட்டி.. சி.எஸ்.கே-வில் மீண்டும் தோனி வருவாரா?

2024-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐ.பி.எல் போட்டி தான், தோனியின் கடைசி தொடர் என்று முன்பு கூறப்பட்டது. இதனால், அவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், “சி.எஸ்.கே. அணிக்காக தோனி விளையாட வேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால், 2025 தொடரில் விளையாடுவாரா என்பதை, இன்னும் அவர் உறுதி செய்யவில்லை.

அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கூறிவிடுவேன் என்று தோனி கூறியிருக்கிறார். அவர் விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், அவரது முடிவுக்காக தற்போது நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஒருவேளை தோனி மீண்டும் விளையாடுவதற்கு முடிவு செய்தால், ‘Uncapped Player’ -ஆக தக்கவைக்கப்படுவார். இதற்கு முன்னர், தோனி விளையாடவே மாட்டார் என்ற முடிவில் இருந்த ரசிகர்களுக்கு, தற்போது காசி விஸ்வநாதன் பேசியிருப்பது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News