Connect with us

Raj News Tamil

திருந்தவே மாட்டாங்களா? 8 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: 70 வயது முதியவர் கைது!

தமிழகம்

திருந்தவே மாட்டாங்களா? 8 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: 70 வயது முதியவர் கைது!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சிகூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (70), இவர் அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் நடவடிக்கையில் சற்று, மாறுதல் ஏற்பட்டதால், சந்தேகம் அடைந்த அவரது தாய், முதியவரால் தனது மகள் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்டதை அறிந்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போச்சோ உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள மங்களமேடு போலீசார் பெரியசாமியை கைது செய்து, சிறைக்கு செல்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தனக்கு கடுமையான நெஞ்சுவலி இருப்பதாக முதியவர் பெரியசாமி
தெரிவித்ததால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரம்பலூர் அருகே தொண்டமாந்துறை கிராமத்தில், உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கோக்சோ சட்டத்தின் கீழ் அரும்பாவூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செளந்தர் ராஜன் என்பவரும், மருத்துவ பரிசோதனையின் போது இதேபோல் நெஞ்சு வலிப்பதாக கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் சிறைக்கு செல்வதை தவிர்க்க திரைப்படக் காட்சிகளில் வருவது போல், நெஞ்சு வலிப்பதாகவும், உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் நாடகமாடலாம் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

More in தமிழகம்

To Top