Connect with us

Raj News Tamil

திருந்தவே மாட்டாங்களா? நீட் பயிற்சி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

இந்தியா

திருந்தவே மாட்டாங்களா? நீட் பயிற்சி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் நீட் பயிற்சி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை நிர்வாணப்படுத்தி, தெருவில் ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வந்த 17 வயது மாணவி ஒருவரை விவேக் என்ற ஆசிரியர் படிப்பில் உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியர் சைலேந்திரா என்பவர் தொலைபேசி வழியே மாணவியை தொடர் கொண்டு இந்த சம்பவம் பற்றி வெளியே கூற கூடாது என மாணவியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் பற்றி அறிந்ததும் மாணவியின் உறவினர்கள் உள்பட சிலர் சேர்ந்து பயிற்சி மையத்திற்கு சென்று அந்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி அவரை தெருவில் ஊர்வலம் அழைத்து சென்றனர். பின்பு அவரை போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். 2 ஆசிரியர்கள் மீது துகோகஞ்ச் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரை தாக்கிய கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

More in இந்தியா

To Top