மாந்திரீக வைத்தியம் : ஒரு வயது குழந்தையை அடித்தே கொன்ற மந்திரவாதி கைது..!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள கோதாவாளி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவருடைய ஒரு வயது குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மந்திரவாதி அஜய் என்பவரிடம் குழந்தையை அழைத்து சென்றுள்ளனர்.

அந்த மந்திரவாதி மாந்தரீக வைத்தியம் எனக் கூறி குழந்தையின் பற்களை உடைத்தும், குழந்தையை தரையில் வீசி அடித்தும் கொடூரமான செயல்களை அவர் செய்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை அங்கிருந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் குழந்தையின் உடல் மோசமடைந்ததால் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து மந்திரவாதி அஜய் மீது காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் மந்திரவாதி அஜய்யை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News