கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள நெலமங்களா பகுதியை சேர்ந்தவர் நேத்ராவதி. தனது கணவன், 8 வயது மகனுடன் வசித்து வந்த இவர், சமூக வலைதளங்களில், அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதன் விளைவாக, நேத்ராவதிக்கும், சந்தோஷ் என்ற இளைஞருக்கும் இடையே, ஒரு வாரத்திற்கு முன்பு, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தற்போது காதலாக மாறிய நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நேத்ராவதியின் கணவர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வார பழக்கத்திற்காக, கணவனையும், 8 வயது மகனையும் பெண் விட்டுச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.