Connect with us

Raj News Tamil

கணவரின் பிறப்புறுப்பை கோடாறியால் வெட்டிய பெண் – காரணம் தெரிஞ்சா மிரண்டுப்போய்டுவீங்க!

இந்தியா

கணவரின் பிறப்புறுப்பை கோடாறியால் வெட்டிய பெண் – காரணம் தெரிஞ்சா மிரண்டுப்போய்டுவீங்க!

சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கீதா (30 வயது). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் சோன்வானி (40 வயது) என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

சங்கீதா பார்ப்பதற்கு கருமையான நிறத்தில் இருப்பதால், அவரது கணவர், கல்யாணம் ஆகிய நாளில் இருந்து, கிண்டல் அடித்து வந்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சங்கீதா, தனது கணவரிடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்றும், தம்பதியினர் இருவருக்கும் இடையே, இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், அருகில் இருந்த கோடாறியை எடுத்து, தனது கணவனை கொடூரமாக சங்கீதா கொலை செய்துள்ளார்.

மேலும், அவரது பிறப்புறுப்பையும் கண்டம் துண்டமாக அவர் வெட்டியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள துர்க் மாவட்ட போலீசார், அந்த பெண்ணை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top