உலகம்
விமான நிலைய எஸ்கலேட்டரில் சிக்கிய பெண்…கால் துண்டான பரிதாபம்
பாங்காக்கில் டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் விமானத்தில் செல்வதற்காக எஸ்கலேட்டரில் சென்றுள்ளார்.
அப்போது அவர் சூட்கேஸ் மீது தடுமாறி விழுந்ததால், அவரது கால் எஸ்கலேட்டரில் சிக்கியது. அந்த பெண்ணின் சத்தம் கேட்டு விமான நிலைய ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பெண்ணின் கால் தனியாக துண்டானது. அதன் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அறுவைசிகிச்சை செய்து மூட்டுகளை மீண்டும் இணைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து விமான நிலையத்தில் உள்ள அந்த நகரும் நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
You must be logged in to post a comment Login