Connect with us

Raj News Tamil

துணி காயவைக்கும் போது உயிாிழந்த பெண்!ஈரோட்டில் விபரீதம் !

தமிழகம்

துணி காயவைக்கும் போது உயிாிழந்த பெண்!ஈரோட்டில் விபரீதம் !

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 50). கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவாின் மகள் ஜோதி (26). மகள் ஜோதிக்கும், கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன் ஜோதி, தனது கணவரைப் பிரிந்து மகளுடன், தந்தையின் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று ஜோதி வழக்கம் போல் துணிகளை துவைத்துவிட்டு, அதனை காய வைக்க வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த கம்பியில் துணிகளை காய வைத்துள்ளார். அப்போது, அந்த துணிக் காயப்போடும் கம்பி மீது, மின்சார வயர் உரசிக் கொண்டிருந்ததை கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால், கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி ஜோதி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜோதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top