Connect with us

Raj News Tamil

உலகின் மிகப்பெரிய பூட்டு: அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தடைந்தது!

இந்தியா

உலகின் மிகப்பெரிய பூட்டு: அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தடைந்தது!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

கோயில் பிரதிஷ்டைக்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நன்கொடைகளையும், பரிசுப் பொருள்களையும் அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்தவகையில், அலிகாரியில் இருந்து மகா சபா சார்பில் ராமர் கோயிலுக்குப் பரிசாக 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் சாவியை வழங்கப்பட்டது.

More in இந்தியா

To Top