தமிழகம்
ஹோட்டலில் வாங்கிய சாம்பார் சாதத்தில் புழு…வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் தனது உறவினர்களுடன் திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் உள்ள பிரபல பெரம்பூர் ஸ்ரீனிவாசா உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது அவர்கள், ஸ்பெஷல் மீல்ஸ் மற்றும் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து காத்திருந்தனர்.
முன்னதாக சாம்பார் சாதத்தை மூவரும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சாப்பாட்டில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அஇதையடுத்து அந்த புழுவைக் அங்கிருந்த ஊழியர்களிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மேலாளரிடம் கேட்ட போது, தவறு நடந்ததை ஒப்பு கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் உடனடியாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.