Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

பாலியல் தொந்தரவு வழக்கு : எடியூரப்பாவை கைது செய்ய தற்காலிக தடை

latest news tamil

இந்தியா

பாலியல் தொந்தரவு வழக்கு : எடியூரப்பாவை கைது செய்ய தற்காலிக தடை

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சிஐடி-க்கு மாற்றப்பட்டது.

சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

இதனையடுத்து பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top