இந்தியா
பறக்கும் விமானத்தில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது..!
சமீப காலமாகவே விமான பயணத்தின் போது பயணிகள் விதி மீறலில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்டிகோ விமானத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா (24) என்ற பெண் கடந்த மார்ச் 5ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், பெண் பயணி பிரியங்கா விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது தான் வைத்திருந்த சிகரெட்டை பற்றவைத்து புகைப்பிடித்துள்ளார். மேலும் சிகரெட்டை ஒழுங்காக அணைக்காமல் தரையில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதை பார்த்த விமானப் பணிப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு விமான நிலையத்திற்கு இந்த தகவல் அனுப்பப்பட்டது.
பெங்களூருவில் விமான தரையிறங்கிய நிலையில், அங்கு தயார் நிலையில் இருந்த விமான நிலைய காவல்துறையினர் இளம்பெண்ணை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
You must be logged in to post a comment Login