Connect with us

Raj News Tamil

“நீ கருப்பா இருக்க.. அழகாவே இல்லை..” – கொடுமைப்படுத்திய கணவர்.. அதிர்ச்சிகர முடிவு எடுத்த மனைவி!

இந்தியா

“நீ கருப்பா இருக்க.. அழகாவே இல்லை..” – கொடுமைப்படுத்திய கணவர்.. அதிர்ச்சிகர முடிவு எடுத்த மனைவி!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள அரூர் பகுதியை சேர்ந்தவர் உண்ணி. 40 வயதாகும் இவருக்கு, நீது என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

தன்னுடைய மனைவி கருப்பாக இருப்பதால், அவரை அடித்து கொடுமைப்படுத்துவதை, உண்ணி வழக்கமாக வைத்துள்ளார். இதனால், கணவரிடம் தொடர்ந்து அடிவாங்கும் அவர், அடிக்கடி தனது தாய் வீட்டுக்கும் சென்றிருக்கிறார்.

கணவரின் சித்ரவதையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நீது, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உண்ணியை கைது செய்தனர். மனைவி கருப்பாக இருப்பதால், அவரை கணவர் அடித்து கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top