உலகம்
உடல் எடை அதிகம்.. குறைக்க நினைத்த இளம்பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?
உடல் எடை அதிகரிப்பு என்பது தான் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மக்கள் கையாளும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. 80 சதவீதம் மக்கள் இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, உடல் எடையை குறைப்பதற்கு பலரும், விரைவான செயல்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அது அனைத்தும் ஆபத்தானது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இதுமாதிரியான ஆபத்தான முடிவு ஒன்றை, இளம்பெண் ஒருவர் எடுத்து, தனது உயிரை இழந்துள்ளார். அதாவது, ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு உடல் எடை அதிகமாக உள்ளது என்று நினைத்து வருந்தியுள்ளார்.
அதனை குறைக்க முடிவு செய்த அவர், ஆரோக்கியமான வழிகளை தேடாமல், அறுவை சிகிச்சையின் மூலம் குறைக்க நினைத்தார். அதன்படி, துருக்கியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண், இரைப்பை பேண்ட் சிகிச்சையை மேற்கொண்டார். ஒரு மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த பெண்ணின் காதலன், “என் தேவதையே தூங்கு, என்றென்றும் எப்போதும் உன்னை நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சரிவிகித உணவு பழக்கத்தையும், முறையான அளவில் உடற்பயிற்சியும் மேற்கொண்டாலே, உடல் எடை குறைக்க முடியும். ஆனால், விரைவில் ரிசல்ட் வேண்டும் என்று நினைக்கும் சிலர், இதுமாதிரியான விபரீத முடிவை எடுத்து, ஆபத்தில் சிக்குகின்றனர்.
You must be logged in to post a comment Login