Connect with us

Raj News Tamil

நர்சிங் படித்த மாணவி.. தனக்குத் தானே செய்த சுய மருத்துவம்.. ஆவி பிடிக்கும்போது நடந்த கொடூரம்..

தமிழகம்

நர்சிங் படித்த மாணவி.. தனக்குத் தானே செய்த சுய மருத்துவம்.. ஆவி பிடிக்கும்போது நடந்த கொடூரம்..

தூத்துக்குடி மாவட்டம் பூமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா. 19 வயதாகும் இவர், தனியார் கல்லூரியில், நர்சிங் படிப்பு படித்து வந்தார். ஜலதோஷம், மூக்கடைப்பு பிரச்சனையால், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட இவர், மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார்.

ஆனால், அப்போதும் பிரச்சனை சரி ஆகாத காரணத்தால் ஆவி பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, திடீரென மயங்க விழுந்த அந்த பெண்ணை, பெற்றோர் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவி பிடிக்க சென்ற இளம்பெண், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுய மருத்துவம் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் இந்த சம்பவம், கொடூரமான உதாரணங்களுடன் விளக்கியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top