உலகம்
கோவிலுக்கு நிர்வாணமாக வந்த இளம்பெண்.. அதிர்ச்சி அடைந்த பக்தர்கள்.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!
ஜெர்மணி நாட்டை சேர்ந்த 28 வயதான இளம்பெண், இந்தோனேசியாவில் உள்ள பாலி நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த பகுதியில் இருந்த பிரபல இந்து கோவில் ஒன்றிற்கு சென்ற அவர், சுவாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து, தனது ஆடைகளை களைந்த அந்த பெண், நிர்வாணமாக, கோவிலில் வலம் வந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பெண்ணை மனநல மருத்துவமனைக்கு, காவல்துறையினா் அனுப்பி வைத்தனர். இளம்பெண் ஒருவர் கோவிலில் நிர்வாணமாக அலைந்து சென்ற சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login