ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜெகதம்பா பகுதியை சேர்ந்தவர் சிராவணி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விவாகரத்து செய்திருந்தார். இதையடுத்து, இவருக்கும், கோபால கிருஷ்ணா என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காதலாக மாறியதையடுத்து, இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழத் தொடங்கினார். ஆனால், அதன்பிறகு, சிராவணி பல்வேறு ஆண்களுடன் பழகுவது, கோபால கிருஷ்ணனுக்கு தெரிந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது மனைவியை எச்சரித்து வந்துள்ளார்.
இருப்பினும், கேட்காமல் தொடர்ந்து, செல்போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக, அந்த பெண் இருந்துள்ளார். இதன்காரணமாக கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர், நைசாக பேசி, அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு சென்று, தனது காதலியை கொலை செய்துவிட்டதாக கூறி, சரண் அடைந்திருக்கிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.