தமிழகம்
கள்ளக்காதலன் உடன் நெருக்கம்.. திடீரென பாலுக்கு அழுத குழந்தை.. கோபத்தில் தாய் செய்த கொடூரம்..
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு, ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், இவருக்கும், மல்லேஷ் என்பவருக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
பின்னர், ஒன்றாக வாழ முடிவெடுத்த இருவரும், சேலம் மாவட்டத்தில் உள்ள செங்கள் சூளை ஒன்றில், வேலைக்கு சேர்ந்துள்ளனர். மேலும், அங்கேயே தங்குவதற்கும், ஏற்பாடு செய்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று, கலைவாணியும், அவரது காதலன் மல்லேஷ்-ம், தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
அப்போது, பசியில் கிடந்த ஒரு வயது குழந்தை, தாய் பாலுக்காக வீறிட்டு அழுதுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கலைவாணி, குழந்தையின் கழுத்தை, காலால் மிதித்துள்ளார். இதில், படுகாயம் அடைந்த குழந்தை, கதறி அழுதுள்ளது. இதனைக் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், என்ன ஆனது என்று கேட்டுள்ளனர்.
அதற்கு, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து, இருவரும் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். அங்கு, சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, மருத்துவர்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், கலைவாணியையும், மல்லேஷையும் கைது செய்தனர். பாலுக்காக அழுத ஒரு வயது குழந்தையை தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login