ஹைதராபாத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பெட்ரோல் பங்கிற்கு தீ வைத்தனர்.
ஹைதராபாத் மல்லாப்பூர் பகுதியில், கஞ்சா போதையில் பெட்ரோல் நிலையத்திற்கு வந்த மூன்று இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரிடம், பாட்டிலில் பெட்ரோல் பிடிக்க சொல்லி பாட்டில் நிறைய பெட்ரோல் பிடித்துக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர் அந்த பாட்டிலில் இருந்த பெட்ரோல் கீழே ஊற்றியதும் மற்றொருவர் தன்னிடம் இருந்த லைட்டரால் பற்றவைத்தார்.
இதனால் தீ மளமளவென பரவியது. உஷாரான பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த நாச்சாரம் போலீசார் அங்கு வந்து அந்த இளைஞர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.