இந்தியா
கிரைண்டரில் மாவு அரைத்த பெண்.. துப்பட்டா சிக்கியதால் பலி.. பிறந்த நாள் இறந்த நாளாக மாறிய சோகம்..
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தலப்பாடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன். இவருக்கு, 24 வயது கொண்ட ஜெயஷீலா என்ற மனைவி உள்ளார். வீட்டின் அருகே உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துவந்த இவர், தனது பிறந்த நாள் அன்றும், பணிக்கு சென்றுள்ளார்.
அங்கு, கிரைண்டர் ஒன்றில் மாவு அரைந்துக் கொண்டிருந்தபோது, அவரது துப்பட்டா, கிரைண்டரின் உள்ளே சிக்கி, விபத்து ஏற்பட்டது. இதில், ஜெயஷீலாவின் கழுத்து நெறுக்கப்பட்டு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த நாள் அன்றே, இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login