Connect with us

Raj News Tamil

பெரிய அஜித்ன்னு நினைப்பு… துணிவு படத்தை பார்த்து வங்கியை கொள்ளையடிக்க வந்த ஆசாமி

சினிமா

பெரிய அஜித்ன்னு நினைப்பு… துணிவு படத்தை பார்த்து வங்கியை கொள்ளையடிக்க வந்த ஆசாமி

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வங்கிக்கு வந்த ஒரு இளைஞர் மிளகாய் பொடி பேப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்துள்ளார்.

மிளகாய் பொடி தூவி ஸ்பிரே அடித்து 3 வங்கி ஊழியர்களையும் கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். வங்கி ஊழியர் ஒருவர் வெளியே வந்து பொதுமக்களை கூச்சலிட்டு அழைத்ததால் பொதுமக்கள் மற்றும் வங்கி காவலாளி உதவியுடன் காவல்துறையினரிடம் கொள்ளையனை பிடித்து ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கலீல் ரகுமான் (25) என்பது தெரியவந்தது. துணிவு படம் உட்பட அனைத்து படங்களையும் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், மேலும் வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.

போலீசார் தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top