தமிழகம்
மசாஜ் சென்டர்.. உள்ளே சென்றால் விபச்சார விடுதி.. இளைஞர் கைது..
ஓசூர் அருகே, மசாஜ் சென்டர் என்ற பெயரில், விபச்சார தொழில் நடத்திய இளைஞரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில், மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த மசாஜ் சென்டரில், விபச்சார தொழில் நடப்பதாக, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாந்திற்கு, ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், அங்கு சென்ற காவல்துறையினர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், ராஜேஷ் என்ற இளைஞர், பெண்களை வைத்து, விபச்சாரம் நடத்தி வருவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், இந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த திரிஷம்மா என்ற பெண்ணையும், காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login