Connect with us

Raj News Tamil

ஆன்லைனில் கடன் வாங்கும் இளைஞர்களே உஷார்.. அதிர்ச்சி சம்பவம்..

தமிழகம்

ஆன்லைனில் கடன் வாங்கும் இளைஞர்களே உஷார்.. அதிர்ச்சி சம்பவம்..

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். 27 வயதாகும் இவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ், ஆன்லைன் செயலி ஒன்றில், கடன் வாங்கியுள்ளார். பின்னர், தனது பிரச்சனைகள் தீர்ந்த பிறகு, கொடுத்த கடனை மீண்டும் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மீண்டும் அவரை தொடர்பு கொண்ட அந்த நிறுவன ஊழியர்கள், பாக்கி பணம் இருப்பதாக கூறியுள்ளனர். அதனை தர மறுத்தால், புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, இணையத்தில் வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், பூச்சி மருந்து குடித்து, தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top