Connect with us

Raj News Tamil

ஓடும் பேருந்து.. திடீரென மயங்கிய இளைஞர்.. பரிசோதனை செய்தபோது கிடைத்த அதிர்ச்சி..

தமிழகம்

ஓடும் பேருந்து.. திடீரென மயங்கிய இளைஞர்.. பரிசோதனை செய்தபோது கிடைத்த அதிர்ச்சி..

திருமங்கலம் அருகே, பேருந்தில் பயணித்த இளைஞர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் பிளக்ஸ் போர்டு வைக்கும் பணியை செய்து வந்தவர் முகேஷ். இவர், தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, தென்காசிக்கு பேருந்தில் பயணித்துள்ளார்.

மதுரை திருமங்கலம் பகுதிக்கு பேருந்து வந்தபோது, தனது இருக்கையில் இருந்து மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பேருந்து நடத்துனரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அங்கு வந்த மருத்துவக் குழுவினர், அவரை பரிசோதனை செய்த பார்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முகேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளிடம், விசாரணை நடத்தினர்ஓடும் பேருந்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More in தமிழகம்

To Top