தமிழகம்
காதலியுடன் நண்பன் வீட்டில் தங்கிய இளைஞர்.. நடுராத்திரியில் செய்த பலே வேலை.. இறுதியில் நடந்த கொடூரம்..
சென்னை பள்ளிக்கரனை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 32 வயதாகும் இவருக்கு, மூர்த்தி என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சதீஷ் தனது காதலியை அழைத்துக் கொண்டு, மூர்த்தியின் வீட்டிற்கு தங்க சென்றுள்ளார்.
அப்போது, மூர்த்தியின் வீட்டில் இருந்த செல்போனையும், 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும், சதீஷ் திருடிச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் இதுகுறித்து அறிந்த மூர்த்தி, தனது நண்பனிடம் பணத்தையும், செல்போனையும், திரும்பக் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
தான் திருடவில்லை என்று கூறிய அவர், சில மணி நேர வாக்குவாதங்களுக்கு பிறகு, செல்போனை மட்டும் திரும்பக் கொடுத்துள்ளார். ஆனால், அங்கிருந்து திருடிய 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் அவர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், மூர்த்தியும், சதீஷ்-ம், மது அருந்தியுள்ளனர். அப்போது, அந்த பணத்தை திரும்ப கொடுப்பது தொடர்பாக இருவருக்கும், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சதீஷை மூர்த்தி பலமுறை வெட்டியுள்ளார்.
அதற்கு சதீஷ்-ம் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து, மூர்த்தியை தாக்கியுள்ளார். இவ்வாறு இரண்டு பேரும், மாறி மாறி தாக்குதல் நடத்தியதில், பலத்த காயமடைந்து, மயங்கி விழுந்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அந்த இரண்டு பேரையும் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சதீஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த மூர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login