ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே ரயில்களில் விபத்து ஏற்படும் வகையில் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் செகந்திராபாத் – அகர்தலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சதி செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் உள்ள ரயில்வே சிக்னல் திடீரென அதிர்வு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் கோகுல் என்ற 30 வயது இளைஞர் குடி போதையில் சிக்னலை உடைக்க முயன்றது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.