Connect with us

Raj News Tamil

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தமிழகம்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால் இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்றிருந்தார்.

அவர் அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிய வந்திருக்கிறது.

இதை இவர் கொண்டாடும் விதமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பார்ட்டி வைத்திருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்ள தடை இருக்கும் நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இர்பான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறையிலும் புகார் அளிக்க தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top