சினிமா
பா.ரஞ்சித் உடன் இணையும் யுவன் கூட்டணி..!
கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். தற்போது சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கிவரும் இவர், கடந்த 2-ஆண்டுகளாக மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.
அந்த வகையில் சென்னை சேத்துபட்டில் தொடங்கிய மக்களிசை நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக யுவன்சங்கர் ராஜா பங்கேற்றார். அப்போது பேசிய யுவன், விரைவில் பா.ரஞ்சித்துடன் இணையவுள்ளதாக தெரிவித்தார். இதற்கு மேடையிலே பதிலளித்த பா.ரஞ்சித்,விரைவில் யுவன் கூட்டணி உருவாகும் என்றார்.
You must be logged in to post a comment Login