Connect with us

Raj News Tamil

போதையில் பீடியை வீசிய கூலி தொழிலாளி; பற்றி எரிந்த குடிசை: தீயில் சிக்கி பலி!

தமிழகம்

போதையில் பீடியை வீசிய கூலி தொழிலாளி; பற்றி எரிந்த குடிசை: தீயில் சிக்கி பலி!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன் (55). இவர் சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகரில் தங்கி ஏழுமலை வாசன் என்பவரிடம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் தங்கியுள்ள குடிசை வீட்டில் ஐந்து பேர் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு இவருடன் தங்கி இருந்த 4 பேர் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் கோவிந்தன் மட்டும் குடிசை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நேற்று பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவிந்தன் வெளியே சென்றுவிட்டு மது அருந்திவிட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். போதையில் வீட்டிற்கு வந்த கோவிந்தன் பீடி பிடித்து விட்டு அணைக்காமல் வீசி விட்டு போதையில் தூங்கியுள்ளார்.

அப்போது பீடியில் இருந்த தீப்பொறி பட்டு குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் கோவிந்தன் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது மாடியில் இருந்து புகை வருவதை பார்த்த கட்டிட உரிமையாளரின் மகன் சோமேஷ் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் வேளச்சேரி பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீய அனைத்து உள்ளே சென்று பார்த்த போது கோவிந்தன் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வேளச்சேரி போலீஸார் கோவிந்தன் உடல்நிலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன்
இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top