Connect with us

Raj News Tamil

வெளிச்சத்திற்கு வந்த கள்ளஉறவு..! நண்பனை போட்டு தள்ளிய திமுக கவுன்சிலா்..!

தமிழகம்

வெளிச்சத்திற்கு வந்த கள்ளஉறவு..! நண்பனை போட்டு தள்ளிய திமுக கவுன்சிலா்..!

சென்னைக்குற்பட்ட தாம்பரம் மாநகராட்சி 45-வது வார்டு கவுன்சிலர் தாமோதரன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் குமார் ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவார். இதில், தாமோதரன் அவர் வீட்டில் வாடகைக்கு இருந்த வேல்விழி என்ற பெண்ணுடன் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வேல்விழியை கவுன்சிலர் தாமோதரன் மணந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் வேல்விழி தாமோதரன் நண்பா் குமாரிடமும் உறவில் இருந்துள்ளாா்.இது தாமோதரனுக்கு தொியவரவே அவா் கடுங்கோபத்தில் இருந்துள்ளாா்.மேலும், இந்தப்பழக்கத்தின் முன்பே , தாமோதரன் நகைகள் மற்றும் பணங்களை வேல்விழியிடம் கொடுத்து வைத்துள்ளாா்.இந்த நகைகள் மற்றும் பணங்களை குமாா் அவ்வப்போது உபயோகப்படுத்திவந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தாமோதரன் மனைவி வேல்விழி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், வேல்விழி ஓட்டுனர் குமாரிடம் கொடுத்த பணத்தை, தாமோதரன் திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கிடையே பகை இருந்து வந்துள்ளது. பின், கடந்த 21 ஆம் தேதி , இரவு நேரத்தில் மது அருந்துவதற்காக தாமோதரன், ஆட்டோ ஓட்டுநர் குமார் மற்றும் கார்த்தி, செந்தில், ராம் குமார், பிரவீன் உள்ளிட்ட நபர்கள் படாளம் அடுத்த குமாரவாடி பகுதிக்கு வந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, பணம், நகை குறித்து தாமோதரன் மற்றும் குமார் இடையே, மீண்டும், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தாமோதரன், சுத்தியல் மற்றும் கூர்மையான கருங்கல் கொண்டு, ஓட்டுனர் குமாரை தலை மற்றும் உடல் பாகங்களில் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் பலத்த படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால், தாமோதரன் உள்ளிட்ட கும்பல், காரில் திரும்ப தாம்பரத்திற்கு சென்றுள்ளனர், என போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. தகாத உறவு காரணமாக நடந்த கொலை காவல்துறையினர் 10 நாட்கள் கழித்து கண்டுபிடித்து இருப்பது பொதுமக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top